பாஜகவின் புதிய தேசியத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனு தாக்கல், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா மற்றும் பிற மூத்த தலைவர்கள் முன்னிலையில் இன்று பாஜக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.
பாஜக அலுவலகத்தில் மூத்த தலைவர்கள்
இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜி.கிஷன் ரெட்டி, மனோகர் லால் கட்டார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இவர்களுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.