“என் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள். காலை 7 மணி முதல் இங்கேயே மாட்டிக் கொண்டிருக்கிறோம். ஒரு அப்டேட் கூட இல்லை, ஒரு மெசேஜ் கூட இல்லை, இண்டிகோவிடமிருந்து எதுவுமே இல்லை” என்று ஒரு இளைஞன் கதறலாகப் பேசும் வீடியோ இதயத்தை உலுக்குகிறது. கர்ப்பிணிப் பெண்ணுடன் பல மணி நேரம் நிற்க வைப்பது, உட்கார இடம் தராமல் தவிக்க விடுவது எந்த அளவுக்கு மனிதத்தன்மையற்றது என்பதை அந்த ஒரு வீடியோவே சொல்லிவிடுகிறது.
இன்னொரு காட்சி இன்னும் வேதனை தருவது. ஒரு தந்தை தன் மகளுக்காக சானிட்டரி பேட் கேட்டுக் கதறுகிறார். “என் மகளுக்கு இப்போது தேவைப்படுகிறது… விமான நிலையத்தில் ஒன்று கூட இல்லையா?” என்று அவர் கேட்கும் குரல் கேட்கும் யாரையும் உலுக்கும். அடிப்படைத் தேவைகள்கூட பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு விமான நிலைய நிர்வாகமும், விமான நிறுவனமும் தோற்றுப் போயிருக்கின்றன.
https://x.com/NewsAlgebraIND/status/1996990338960134332?t=xfcuBdSXdAcuJeGnTQclQQ&s=08