இந்த நெருக்கடி ஒரே இரவில் தீர்க்கப்படாது என்பதை இண்டிகோ ஒப்புக்கொண்டது. இருப்பினும், "இந்த இடைப்பட்ட காலத்தில் உங்களுக்கு உதவவும், எங்கள் செயல்பாடுகளை கூடிய விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டு வரவும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்று உறுதியளித்தது.
விமான நிலையங்களில் நெரிசலைக் குறைக்கவும், செயல்பாடுகளை உறுதிப்படுத்தவும், விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து, நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
விமானங்கள் ரத்து செய்யப்பட்ட பயணிகள் விமான நிலையங்களுக்கு வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வேகமாக பதிலளிக்க உதவி மையத்தின் திறனைப் பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும் இண்டிகோ தெரிவித்துள்ளது.