ராஜ விருந்து குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில பதிவிட்டுள்ள கார்த்தி சிதம்பரம், அதில் சைவம் மட்டும் வழங்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். விருந்தில் “முழுக்க சைவமா? ஏன்? இந்திய உணவு மரபின் பரந்த பரிமாணத்தை உணர்த்த வேண்டுமானால் மாமிசம், கோழி, கடல் உணவுகள் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கலாம் எனவும் அதேபோல் இந்திய ஓயின்களும் இடம்பெற்று இந்தால் நன்றாக இருந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியவின் கலாச்சார உணவுகள், உலகம் முழுவதும் அதன் சுவை, மசாலா, சமையல் முறைகளால் பரவலாக பாராட்டு பெறுகிறது. இந்திய சமையல் என்பது வெறும் சைவ உணவுகளுக்கு மட்டும் அல்ல. பல்வேறு வகையான non-veg உணவுகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோழி, மீன், இறைச்சி வகைகள் பல மாநிலங்களின் அடையாள உணவாக உள்ளது. தமிழ்நாட்டின் மீன் குழம்பு, ஆந்திரா கார சிக்கன், பஞ்சாபி பட்டர் சிக்கன், கர்நாடகாவின் மீன் வருவல் போன்றவை இந்தியாவின் உணவு வரைபடத்தில் தனித்துவம் சேர்க்கின்றன.