அப்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அங்கு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் குறித்து மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார். ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வேட்பாளர் பட்டியல்கள் உட்பட கட்சி தொடர்பான பொருட்களை ED பறிமுதல் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
வேட்பாளர் பட்டியலை சேகரிப்பது ED, அமித் ஷாவின் வேலையா?
மேலும், மத்திய ஏஜென்சிகளை உள்துறை அமைச்சர் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார். "கட்சியின் ஹார்டு டிஸ்க், வேட்பாளர் பட்டியலை சேகரிப்பது ED, அமித் ஷாவின் வேலையா? நாட்டைக் பாதுகாக்க முடியாத மோசமான உள்துறை அமைச்சர், எனது கட்சியின் அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் செல்கிறார்" என்று மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.