காகித அட்டைகளை விட இது உறுதியானது மற்றும் நீண்ட காலம் சேதமடையாமல் இருக்கும். இதில் க்யூஆர் கோட் (QR Code), நுண் எழுத்துக்கள் (Micro text) போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
இது ஏடிஎம் கார்டு போன்ற அளவில் இருப்பதால், மணிப்பர்ஸில் (Wallet) எளிதாக எடுத்துச் செல்ல முடியும். சாதாரண ஆதார் கடிதம் அல்லது இ-ஆதார் (e-Aadhaar) ஆவணங்களுக்கு இருக்கும் அதே மதிப்பு இதற்கும் உண்டு.
2020-இல் ஆதார் PVC கார்டு அறிமுகமானது. அதிலிருந்து இதற்கான கட்டணம் மாற்றப்படாமல் இருந்த நிலையில், தற்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.