10-ம் வகுப்பில் 25% பாடத்திட்டம் குறைக்கப்படும் என்ற கேரள அரசின் முடிவுக்கு பெரும் வரவேற்பு எழுந்துள்ளது. கேரள மாணவர்கள் தங்களுக்கு பாடச்சுமை அதிகமாக இருப்பதாக தொடர்ந்து புகார்களை தெரிவித்து வந்தனர். அதிகப்படியான பாடங்கலை குறிப்பிட்ட காலத்திற்குள் படித்து முடிப்பது மாணவர்களுக்கு கடும் மன அழுத்தத்தை கொடுப்பதாக பலரும் கருத்துகளை கூறி வந்தனர்.
பாடத்திட்டக் குழு பரிந்துரை
தேர்வு நேரங்களில் மாணவர்கள் சந்திக்கும் தேவையற்ற பதற்றத்தைக் குறைக்கவும், பாடங்களை மனப்பாடம் செய்வதைத் தவிர்த்து புரிந்து படிப்பதற்கு நேரத்தை ஒதுக்கவும் பாடத்திட்டத்தை குறைக்கும் முடிவை கேரள அரசு கையில் எடுத்துள்ளது.
தற்போதைய சூழலில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பாடச்சுமையை குறைப்பது அவசியம் கல்வி நிபுணர்கள் அடங்கிய பாடத்திட்டக் குழு மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் கேரள அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.