தனது அரசியல் வாழ்க்கையில் பல போராட்டங்களை முன்னெடுத்தவர். முதிய வயதிலும் அரசியல் அரங்கில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வந்த அவர், கேரள மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அச்சுதானந்தனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.