இந்த வழக்கு தொடர்பாக கமல் அன்சாரி, முகமது பைசல், குட்புதின் சித்திக், நவீத் ஹசன் கான், ஆசீப் கான், தன்வீர் அகமது, முகமது மஜித், ஷேக் முகமது அலி, முகமது சஜித், ரகுமான் ஷேக், ஷாகில் முகமது, சமீர் அகமது ஆகிய 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், 2015ஆம் ஆண்டு 12 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இவர்களில் 5 பேருக்கு தூக்கு தண்டனையும், எஞ்சிய 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் மகாராஷ்டிராவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து, தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி 12 பேரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளி கமல் அன்சாரி கடந்த 2021ஆம் ஆண்டு நாக்பூர் சிறையில் கொரோனாவால் உயிரிழந்தார்.