செப்டம்பரில் செம மழை கொட்டித் தீர்க்க போகுது! வானிலை மையம் எச்சரிக்கை!

Published : Aug 31, 2025, 07:43 PM IST

இந்தியா முழுவதும் செப்டம்பர் மாதத்தில் வழக்கத்தை விட அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. செப்டம்பரில் சராசரியை விட 109% அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
13
வானிலை மையம் எச்சரிக்கை

இந்தியா முழுவதும் செப்டம்பர் மாதத்தில் வழக்கம் போலவே அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. ஏற்கனவே பல மாநிலங்களில் வெள்ளம், மேக வெடிப்பு, நிலச்சரிவு எனப் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

23
அதிக மழைப்பொழிவு

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறுகையில், செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் சராசரியைவிட 109% அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப்டம்பர் மாத கனமழையால் உத்தரகாண்ட், டெல்லி, தெற்கு ஹரியானா, மற்றும் வட ராஜஸ்தானில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

33
செப்டம்பரில் மழை அதிகரிப்பு

1980 முதல் செப்டம்பர் மாதத்தில் மழையின் அளவு அதிகரித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை விலகும் தேதி செப்டம்பர் 1-ல் இருந்து செப்டம்பர் 17 ஆக மாற்றப்பட்டதும் இதற்கு ஒரு சான்றாகும்.

இந்த ஆண்டு ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை, இந்தியாவில் 743.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது, இது இயல்பை விட 6% அதிகம். குறிப்பாக ஆகஸ்ட் மாதம் வடமேற்கு இந்தியா மற்றும் தீபகற்ப தென்னிந்தியாவில் வழக்கத்தை விட 31% அதிக மழை பெய்துள்ளது.

இந்த மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க, மாநில அரசுகளும், பேரிடர் மேலாண்மை அமைப்புகளும் உஷார் நிலையில் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories