நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவைகள் ஒரு வாரமாக கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு புதிய விமான நிறுவனங்களை ஊக்குவிக்கிறது தீர்மானித்துள்ளது. உள்நாட்டு விமான சேவையில் 65 சதவீத பகுதியை இண்டிகோ கட்டுப்படுத்தி வருவதால், அதன் செயல்பாட்டில் ஏற்பட்ட தடங்கல்கள் பயணிகளை பெரும் நெருக்கடியில் ஆழ்ந்துள்ளது. இதன் பின்னணியில், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு லோக் சபாவில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.