டெய்லி வேணும்! நைட்டானாவே போதும் ஒயாமல் டார்ச்சர் கொடுத்த பொண்டாட்டி! கதறும் கணவர்!

Published : Oct 06, 2025, 01:41 PM IST

பெங்களூருவில், கணவர் படுக்கையறை வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பியதாக மனைவி புகார் அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த கணவர், தனது மனைவிதான் தன்னை சித்ரவதை செய்வதாக வீடியோ வெளியிட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் பெரும் திருப்பம்.

PREV
14
மனைவி பரபரப்பு புகார்

கர்நாடக மாநிலம் பெங்களூரு புட்டேனஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் சையது இனாமுல்(35). இவருக்கு 32 வயதில் மனைவி இருக்கிறார். இந்நிலையில் படுக்கை அறையில் ரகசிய கேமரா பொருத்தி தாம்பத்தியத்தில் ஈடுபட்டதை எனது கணவர் வீடியோ எடுத்து அவரது நண்பர்களுக்கு அனுப்பி வைப்பதாக மனைவி புட்டேனஹள்ளி காவல் நிலையத்தில் கடந்த 2ம் தேதி பரபரப்பு புகார் அளித்தார்.

24
போலீஸ் வழக்குப்பதிவு

மேலும் துபாயில் வசிக்கும் தனது நண்பர்களுடன் உல்லாசம் அனுபவிக்கும்படி எனக்கு எனது கணவர் தொல்லை கொடுத்து வருகிறார். அவர் சொல்வதை கேட்டு நடக்காவிட்டால் விவாகரத்து செய்து விடுவதாக மிரட்டுகிறார். மேலும் முதல் திருமணத்தை மறைத்து விட்டு, 2-வதாக என்னை திருமணம் செய்திருக்கிறார். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் தெரிவித்தார். பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் பிளாட் வாங்க நகைகளை கேட்டு மிரட்டுகிறார். சில நேரங்களில் அடித்து துன்புறுத்துவார். பொது இடங்களில் கூட என்னை அடித்து தாக்கியுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து கணவர் சையது இனாமுல் (35) என்பவரை கைது செய்ய தீவிரம் காட்டி வந்தனர்.

34
கணவர் மறுப்பு

இந்நிலையில் தன் மீதான புகாரை சையது இனாமுல் திட்டவட்டமாக மறுத்தது மட்டுமல்லாமல் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளார். அதில் எனக்கு இரண்டு திருமணம் ஆகவில்லை. ஒருமுறை தான் திருமணம் நடந்தது. எனக்கு ஒரு மனைவி தான். வேறு எந்த பெண்களுடனும் எனக்கு தொடர்பு இல்லை. படுக்கை அறையில் ரகசிய கேமரா வைத்ததாக, என் மீது மனைவி கூறிய குற்றச்சாட்டு பொய்.

44
மனைவி மறுப்பு

என் மனைவி தான் என்னிடம் இருந்து ரூ.17 லட்சம் வாங்கியுள்ளார். இதில் 13 லட்சம் ரூபாய்க்கு என் மனைவிக்கு நகை வாங்கி கொடுத்து உள்ளேன். மனைவியின் சகோதரியும் இரண்டு முறை விவாகரத்து பெற்றவர். முன்னாள் கணவர்களை மிரட்டி பணம் பறிக்கின்றனர். மேலும் திருமணத்திற்கு பிறகு தினமும் என்னை தாம்பத்தியத்தில் ஈடுபட என் மனைவி கட்டாயப்படுத்துவால். அந்த சந்தர்ப்பத்தில் அவர் ஒரு மனநோயாளி போல் நடந்து கொள்வார். என் மனைவி தான் என்னை அதிக அளவில் சித்ரவதை செய்து வந்தார் வீடியோவில் கூறியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் சையத் இனாமுல் குற்றச்சாட்டை அவரது மனைவி மறுத்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories