டைகர் ஹில் மற்றும் ராக் கார்டன் என டார்ஜிலிங்கில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி, சிலிகுரி மற்றும் கூச் பெஹார் ஆகிய பகுதிகளும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. டார்ஜிலிங் உள்பட மேற்கு வங்கத்தின் பல்வேறு இடங்களில் வரும் 7ம் தேதி அதி கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
டார்ஜிலிங் எம்.பி. சொல்வது என்ன?
''கனமழை மற்றும் நிலச்சரிவாஅல் உயிரிழப்புகள், சொத்து இழப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நான் நிலைமையை ஆராய்ந்து வருகிறேன், மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன்" என்று டார்ஜிலிங் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜு பிஸ்தா தெரிவித்துள்ளார்.