டெல்லியின் வசந்த் கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஆசிரமம் ஒன்றின் இயக்குனர் சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்தசாரதி மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். இந்த ஆசிரமத்திற்கு உட்பட்ட ஸ்ரீ சாரதா இந்திய மேலாண் மையத்தில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற்று படித்து வருகின்றனர்.
இங்கு முதுநிலை நிர்வாகத்திற்கான டிப்ளமோ படித்து வரும் 17 மாணவிகள், பார்த்தசாரதி ஆபாசமாக பேசுதல், ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புதல், மற்றும் உடல்ரீதியாக கட்டாயப்படுத்தி தொடர்பு கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.