Free Ration: ரேஷன் கார்டுதாரர்களுக்கு பம்பர் நியூஸ்! இலவச ரேஷன் திட்டத்தில் அதிரடி மாற்றம்!

Published : Jun 29, 2026, 06:46 AM IST

Free Ration: அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) ரேஷன் வழங்கும் முறையில் மத்திய அரசு ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வர உள்ளது. இலவச ரேஷன் திட்டத்தில் சூப்பர் மாற்றம் வர உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
ஏழை மக்களுக்கு கை கொடுக்கும் ரேஷன் கடைகள்

இந்தியா முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்களே வாழ்வாதரமாக உள்ளன. இந்தியாவில் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டம் மூலம் மத்திய அரசு ரேஷன் கடைகள் வாயிலாக அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்கள் வழங்கி வருகிறது.

இனி குடும்பத்தில் ஒருவருக்கு 7 கிலோ அரிசி

தற்போதுள்ள விதியின்படி, ஒரு குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருந்தாலும், மாதம் 35 கிலோ உணவு தானியங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. புதிய திட்டத்தின்படி, ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா 7 கிலோ வழங்கப்படும். ஆனால், ஒரு குடும்பம் அதிகபட்சமாக 35 கிலோ மட்டுமே பெற முடியும். மத்திய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், இந்த மாற்றங்கள் அடங்கிய தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா 2026-ன் வரைவை வெளியிட்டுள்ளது. இந்த மசோதா, எதிர்காலத்தில் ரேஷன் விநியோக முறைக்கு ஒரு புதிய வடிவத்தைக் கொடுக்கும்.

24
மொத்தம் 35 கிலோ தானியங்கள்

இந்த வரைவு மசோதா குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்க ஜூலை 13, 2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்திய உணவு அமைச்சகத்தின் இணையதளம் வாயிலாக தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம் அரசின் கொள்கை உருவாக்கத்தில் மக்கள் நேரடியாகப் பங்கேற்க இது ஒரு நல்ல வாய்ப்பு ஆகும்.

 பழைய முறையில், 7-8 உறுப்பினர்கள் கொண்ட பெரிய குடும்பங்களுக்கும் 35 கிலோ மட்டுமே கிடைத்தது. இதனால், ஒரு நபருக்கு 4-5 கிலோ மட்டுமே கிடைத்தது. புதிய விதியின்படி, 5 உறுப்பினர்கள் கொண்ட குடும்பம் 35 கிலோ பெறும். ஆனால், 6 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்.

34
மக்கள் சத்தான உணவை பெறுவதே முக்கியம்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ், முன்னுரிமைப் பயனாளிகள் தற்போது ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியம் பெறுகின்றனர். புதிய திட்டத்தில், AAY பயனாளிகள் 7 கிலோ பெறுவார்கள். இதன் மூலம், மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கும். இந்த சீர்திருத்தத்தின் பின்னணியில் 'மனித வாழ்க்கை சுழற்சி அணுகுமுறை' இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. அதாவது, குழந்தை முதல் முதியவர் வரை, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் போதுமான மற்றும் சத்தான உணவை உறுதி செய்வதே இந்த புதிய கொள்கையின் முக்கிய நோக்கம்.

அரிசி, கோதுமை இலவசம்

தற்போது NFSA-ன் கீழ் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா பிரிவு பயனாளிகள் அரிசி மற்றும் கோதுமையை இலவசமாகப் பெறுகின்றனர். புதிய திட்டத்திலும் இந்த இலவச சலுகை தொடரும் எனத் தெரிகிறது. அளவு மற்றும் விநியோக முறையில் மட்டுமே மாற்றம் வரும். பல ஆண்டுகளாக, குடும்பங்களின் அளவுக்கேற்ப ரேஷன் விநியோகத்தில் பெரும் ஏற்றத்தாழ்வு இருந்து வருவதை உணவு அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த புதிய சீர்திருத்தம், அந்தப் பாகுபாட்டைக் களைந்து, உண்மையான தேவைக்கேற்பப் பலன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

44
கோடிக்கணக்கான மக்கள் பயனடைவார்கள்

இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், குறிப்பாக 5 உறுப்பினர்கள் வரை கொண்ட சிறிய குடும்பங்கள் அதிகப் பயனடைவார்கள். ஆனால், 6 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பெரிய குடும்பங்களுக்கு தலா 7 கிலோ வீதம் கணக்கிட்டாலும் அதிகபட்சமாக 35 கிலோ மட்டுமே கிடைக்கும் என்பதால், அவர்களுக்கு இதில் கூடுதல் பலன் இருக்காது. ஒட்டுமொத்தமாக, இந்த சீர்திருத்தம் நாட்டின் கோடிக்கணக்கான ஏழை குடும்பங்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பில் ஒரு மைல்கல்லாக அமையும்.

Read more Photos on
click me!

Recommended Stories