இந்தியா முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்களே வாழ்வாதரமாக உள்ளன. இந்தியாவில் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டம் மூலம் மத்திய அரசு ரேஷன் கடைகள் வாயிலாக அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்கள் வழங்கி வருகிறது.
இனி குடும்பத்தில் ஒருவருக்கு 7 கிலோ அரிசி
தற்போதுள்ள விதியின்படி, ஒரு குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருந்தாலும், மாதம் 35 கிலோ உணவு தானியங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. புதிய திட்டத்தின்படி, ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா 7 கிலோ வழங்கப்படும். ஆனால், ஒரு குடும்பம் அதிகபட்சமாக 35 கிலோ மட்டுமே பெற முடியும். மத்திய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், இந்த மாற்றங்கள் அடங்கிய தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா 2026-ன் வரைவை வெளியிட்டுள்ளது. இந்த மசோதா, எதிர்காலத்தில் ரேஷன் விநியோக முறைக்கு ஒரு புதிய வடிவத்தைக் கொடுக்கும்.