IVF தொழில்நுட்பத்தில் கருத்தரிப்பு! AI உதவியுடன் பிறக்கும் குழந்தை!

Published : Apr 19, 2025, 10:54 AM ISTUpdated : Apr 19, 2025, 11:28 AM IST

செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் முழுமையாக தானியங்கி முறையில் செயற்கை கருத்தரித்தல் (IVF) மூலம் ஒரு குழந்தையின் கரு உருவாகியுள்ளது. இது கருத்தரித்தல் சிகிச்சையில் புதிய சாதனையாகும்.

PREV
14
IVF தொழில்நுட்பத்தில் கருத்தரிப்பு! AI உதவியுடன் பிறக்கும் குழந்தை!
Automated IVF technology

கருவுறுதல் சிகிச்சை:

இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன் (In Vitro Fertilization) என்பது கருவுறாமைக்கான ஒரு சிகிச்சையாகும், இதன் போது முதிர்ந்த கரு முட்டைகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்தில் கருத்தரிக்கப்படுகின்றன என்று மேயோ கிளினிக் தெரிவித்துள்ளது. இந்த மைல்கல் IVF சிகிச்சையில் எதிர்காலத்தில் நிகழக்கூடிய மாற்றத்தைக் குறிக்கிறது. இது IVF மூலம் கருத்தரித்தலை அதிகரிக்கக்கூடும். கருவூட்டலுக்குத் தேவையான சுழற்சிகளின் எண்ணிக்கையையும் குறைக்கக்கூடும்.

24
Intracytoplasmic Sperm Injection (ICSI)

நிபுணர்களுக்கு மாற்று:

இந்த தானியங்கி IVF அமைப்பு நியூயார்க்கை தளமாகக் கொண்ட கன்சீவபிள் லைஃப் சயின்சஸைச் சேர்ந்த நிபுணர்களால் உருவாக்கப்பட்டது. இதில் இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக்ஷன் (ICSI) சிகிச்சைக்குத் தேவையான உதவியை இயந்திரங்கள் மற்றும் ரிமோட்கள் மூலம் பெறுகிறது.

ICSI என்பது ஒரு சிக்கலான செயல்முறையாகும். இதற்கு பொதுவாக ஒரு முட்டையில் விந்தணுவை செலுத்துவதற்கு கருவியல் நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த AI அமைப்பு, மிகவும் சாத்தியமான கருக்களை அடையாளம் கண்டு, கருத்தரித்தல் விகிதங்களை மேம்படுத்துகிறது. மேலும், இந்த முறையில் நிபுணர்களின் தலையீடு இல்லாமலே விந்தணுவை உட்செலுத்துவதற்கான 23 செயல்களையும் செய்ய முடியும்.

இந்தியாவின் ஸ்டார்ட்அப் தலைநகரமாக மாறிவரும் பெங்களூரு!

34
Fertility Treatment

அதிக நேரம் எடுக்கும் சிகிச்சை:

பாரம்பரிய IVF முறையுடன் ஒப்பிடும்போது இந்த செயல்முறை அதிக நேரம் எடுத்தாலும், கருவில் உள்ள ஆரம்பகால நோய்களை அடையாளம் காண இது உதவுகிறது. தானியங்கி IVF அமைப்பு, இயக்கம் மற்றும் உருவவியல் பகுப்பாய்வு அடிப்படையில் கருத்தரிக்கக்கூடிய விந்தணுவைத் தேர்ந்தெடுக்கிறது. ரோபோ கைகள் இந்த விந்தணுவை முட்டைக்குள் துல்லியமாகச் செலுத்த உதவுகின்றன.

இந்த புதிய அணுகுமுறை மூலம் கருவுறுதலில் நிலைத்தன்மையையும் செயல்திறனையும் அதிகரிக்கக்கூடும். கரு வளர்ச்சி விகிதங்களும் அதிகரிக்கும். நிபுணர்கள் மீதான அழுத்தத்தையும் குறைக்கும் எனக் கூறப்படுகிறது.

44
Future of AI in Healthcare

புதிய சகாப்தம்:

இந்த சாதனை குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், இந்த செயல்முறையின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இருந்தாலும், கருவுறுதலில் தொழில்நுட்பமும் உயிரியலும் கைகோர்க்கும் புதிய சகாப்தத்தின் தொடக்கமாக இந்த கண்டுபிடிப்பு உள்ளது என்றும் கருதுகின்றனர்.

சுகாதாரத் துறையை AI தொடர்ந்து மாற்றியமைத்து வருவதால், கருவுறுதலிலும் அதன் பங்களிப்பு உறுதியாக இருக்கும். இது தானியங்கி IVF சிகிச்சையை பரலாக்கக்கூடும்.

14வது மகனுக்குப் பெயர் வைத்த எலான் மஸ்க்! தாய்க்குக் 15 மில்லியன் டாலர் பரிசு!

Read more Photos on
click me!

Recommended Stories