அதேபோல் அசாம் மாநிலத்தில் மோரிகானில் அதிகாலை 4.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பிரம்மபுத்திராவின் தெற்கு கரையில் உள்ள மோரிகான் மாவட்டத்தில் 50 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட ஆழத்தில் 26.37 வடக்கு அட்சரேகையிலும், 91.50 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் அருணாசலப் பிரதேசத்தின் சில மத்திய மேற்கு பகுதிகளில் மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், மேற்கு வங்கம் பகுதியில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.