பல்கலைக்கழகங்களின் வேந்தர்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் NIIT பல்கலைக்கழகத்தின் வேந்தராக டாக்டர் கஸ்தூரி ரங்கன் பணியாற்றினார். சமூக மேம்பாட்டிற்கான அறிவைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தி, கர்நாடக அறிவு ஆணையத்திற்கும் அவர் தலைமை தாங்கினார். 2003 முதல் 2009 வரை மாநிலங்களவையில் உறுப்பினராகவும், முன்னாள் திட்டக் குழுவிலும் பணியாற்றி, தேசிய கொள்கை உருவாக்கத்திற்கு பங்களித்தார்.
கஸ்தூரி ரங்கனின் ஆரம்பகால வாழ்க்கை
பல்வேறு சாதனைகளைக்கு உரித்தான கஸ்தூரி ரங்கன் அக்டோபர் 24, 1940 இல் எர்ணாகுளத்தில் பிறந்தார். அவரது பெற்றோர், சி.எம்.கிருஷ்ணஸ்வாமி ஐயர் மற்றும் விசாலாட்சி, தமிழ்நாட்டில் ஆழமான வேர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கஸ்தூரி ரங்கனின் தாய்வழி தாத்தா, ஸ்ரீ அனந்தநாராயண ஐயர். எர்ணாகுளத்தில் மதிக்கப்படும் நபராக இருந்தார். பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, அவர் சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றினார்.