வீடுகள் தகர்ப்பு
முதுகலை பட்டதாரியான ஷெஹசாதா அருகிலுள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். வெடிமருந்துகளைப் பயன்படுத்தி இரண்டு பயங்கரவாதிகளின் வீடுகளும் இடிக்கப்பட்டன. அப்போது வீட்டில் யாரும் இல்லை. த்ரால் பகுதியைச் சேர்ந்த ஆசிஃப், பிஜ் பஹேரா பகுதியைச் சேர்ந்த ஆதில் உசைன் தோக்கர் ஆகியோரின் வீடுகளே இடிக்கப்பட்டன.
லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு
இருவரும் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு வைத்திருந்ததாக ஏற்கனவே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்திருந்தன. பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களின் ஓவியங்களை காவல் துறையினர் வெளியிட்டனர். இதில் ஹாஷிம் மூசா என்ற சுலேமான் மற்றும் அலி பாய் என்ற தல்ஹா ஆகிய இருவர் பாகிஸ்தானியர்கள். மூன்றாவது நபர் தான் அப்துல் உசேன் தோகர். காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கில் வசிப்பவர்.