எதிர்க்கட்சித் தலைவர்கள் மாநில அரசே இதுபோன்ற துயரச் சம்பவத்துக்குக் காரணம் என்று கடுமையாக சாடுகின்றனர். இது அரசாங்கத்தால் தூண்டப்பட்ட கொலை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பதிலளித்த துணை முதல்வர் டி.கே. சிவகுமார், ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்ததாகவும், 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறினார். இருப்பினும், அவர்களால் ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றார்.