ஆண்மையற்றவர்னு சொன்னா அவதூறா? கணவரின் மானத்தை வாங்கிய மனைவி! விவாகரத்து வழக்கில் அதிரடி தீர்ப்பு!

Published : Aug 01, 2025, 07:27 PM IST

விவாகரத்து மனுவில் கணவரை 'ஆண்மையற்றவர்' எனக் குறிப்பிடுவது அவதூறு இல்லை என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மனைவியின் நலனைப் பாதுகாக்க இத்தகைய குற்றச்சாட்டுகள் நியாயமானவை எனவும், சட்ட ஆவணங்களில் இடம்பெற்றால் அவதூறாகாது எனவும் கூறியுள்ளது.

PREV
13
ஆண்மையற்றவர் என்று சொல்வது அவதூறா?

கணவர் மீது விவாகரத்து மனுவில் வைக்கப்படும் "ஆண்தன்மை அற்றவர்" என்ற குற்றச்சாட்டு, ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் அவதூறு ஆகாது என மும்பை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

தனது விவாகரத்து மற்றும் ஜீவனாம்ச மனுக்களில் தனது மனைவி தன்னை "ஆண்தன்மை அற்றவர்" என்று குறிப்பிட்டதால், தனது நற்பெயர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கணவர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதிபதி எஸ்.எம். மோடக் தலைமையிலான தனி நீதிபதி அமர்வு, அந்த ஆணின் கிரிமினல் அவதூறு புகாரை தள்ளுபடி செய்தது. திருமண உறவில் இருந்து எழும் சட்டப் போராட்டங்களில், மனைவியின் நலனைப் பாதுகாப்பதற்காக அத்தகைய குற்றச்சாட்டுகளை வைப்பது நியாயமானது என்று நீதிபதி தனது ஜூலை 17 தேதியிட்ட உத்தரவில் குறிப்பிட்டார். மேலும், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சட்டப்பூர்வ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டால், அது அவதூறாகக் கருதப்படாது என்றும் அவர் தீர்ப்பளித்தார்.

23
வழக்கின் பின்னணி என்ன?

விவாகரத்து மற்றும் ஜீவனாம்ச மனுக்களில் மட்டுமல்லாமல், காவல்துறையில் அளித்த புகாரிலும் தனது மனைவி தன்னை "ஆண்தன்மை அற்றவர்" என்று குறிப்பிட்டதால், சமூகத்தில் தனது பெயர் கெட்டுவிட்டதாக அந்த கணவர் வழக்கு தொடர்ந்தார். இந்தத் தகவல்கள் பொது ஆவணங்களாக மாறியதால், தனது நற்பெயருக்கு ஈடுசெய்ய முடியாத அளவுக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் வாதிட்டார்.

ஆனால், கணவரின் கொடுமைகளை நிரூபிக்கவும், விவாகரத்து கோரிக்கையை நியாயப்படுத்தவும் மட்டுமே மனைவி இந்த கருத்துக்களைத் தெரிவித்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டது. சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவற்றை அவதூறாகக் கருத முடியாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

இந்த வழக்கின் கீழ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனைவி, அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததால், அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையும் நிறுத்தப்பட்டது.

33
நாக்பூர் நீதிமன்ற தீர்ப்பு

இந்தத் தீர்ப்பு 2018-ஆம் ஆண்டு நாக்பூர் உயர் நீதிமன்றக் கிளையின் தீர்ப்பிலிருந்து மாறுபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கில் நீதிபதி சுனில் சுக்ரே, சட்டப்பூர்வ சூழலுக்கு வெளியே ஒருவரை "ஆண்தன்மை அற்றவர்" என்று அழைப்பது அவதூறு என்று தீர்ப்பளித்திருந்தார். அவ்வாறு குறிப்பிடுவது ஒரு ஆணின் ஆண்மையை கேள்விக்குள்ளாக்கி, சமூகத்தில் அவரைக் கேலிக்கு ஆளாக்கலாம் என்றும், அது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 499 (அவதூறு) மற்றும் 500 (அவதூறுக்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் வரும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories