வயநாட்டில் பிரியங்கா காந்தி
இதன் காரணமாக நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தனது குடும்ப தொகுதி கைவிட்ட போதும் வயநாடு தொகுதி மட்டுமே கை கொடுத்தது. எனவே அப்படிப்பட்ட தொகுதியை கைவிட்டு விடக்கூடாது என்பதற்காக தனது சகோதரியும், காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை களம் இறக்கியுள்ளார் ராகுல்காந்தி, கடந்த 25 ஆண்டு காலமாக அவர் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், அவர் ஒருபோதும் தேர்தலில் போட்டியிட்டதில்லை.
இந்த முறை தான் தேர்தல் களத்தில் நேரடியாக இறங்கியுள்ளார். எனவே இந்த தேர்தலில் ராகுல் காந்தி வாங்கிய வாக்கை விட அதிக வாக்குகளை பிரியங்கா காந்தி பெற வைக்க காங்கிரஸ் கட்சியினர் களம் இறங்கியுள்ளனர். இந்தநிலையில் பிரியங்கா காந்திக்கு டப் கொடுக்க நடிகை குஷ்புவை களம் இறக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.