2025 பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான முழுமையான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
முதற்கட்டத் தேர்தல் (121 தொகுதிகள்):
முதல் கட்டத் தேர்தலுக்கான அறிவிக்கை அக்டோபர் 10, 2025 (வெள்ளிக்கிழமை) அன்று வெளியிடப்படுகிறது.
வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய அக்டோபர் 17 கடைசி நாள் ஆகும். மனுக்கள் அக்டோபர் 18 பரிசீலிக்கப்பட்டு, வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 20 இறுதி நாளாகும்.
இதைத் தொடர்ந்து, முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6, 2025 (வியாழக்கிழமை) அன்று 121 தொகுதிகளில் நடைபெறும்.
இரண்டாம் கட்டத் தேர்தல் (122 தொகுதிகள்):
இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான அறிவிக்கை அக்டோபர் 13, 2025 (திங்கட்கிழமை) அன்று வெளியிடப்படுகிறது. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய அக்டோபர் 20 கடைசி நாள் ஆகும். மனுக்கள் அக்டோபர் 21 பரிசீலிக்கப்பட்டு, வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 23 இறுதி நாளாகும்.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11ஆம் தேதி 122 தொகுதிகளில் நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவு:
இரண்டு கட்டங்களுக்கும் சேர்த்து மொத்தமாக வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அனைத்துத் தேர்தல் நடைமுறைகளும் நவம்பர் 16 க்குள் நிறைவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.