இந்த பதிவை 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர், 6,000க்கும் அதிகமானோர் கருத்து தெரிவித்து பெரிய ஆன்லைன் போரே நடத்தியுள்ளனர். 3,500 பேர் இதை மறுபதிவு செய்துள்ளனர், 9,000க்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர், 1,500 பேர் புக்மார்க் செய்துள்ளனர். இங்கு பரஸ்பர ஆதரவு மற்றும் எதிர்ப்பு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
பெங்களூரு அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது, உள்ளூர் கலாச்சாரத்தை மதிப்பது முக்கியம்தான், ஆனால் அதுவே உயர்ந்தது என்று நடிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
உள்ளூர் மொழியை மதிப்பது முக்கியம். ஆனால் மொழி என்ற பெயரில் மக்களை பிரிப்பது எதிர்மறை எண்ணங்களை தூக்கி நிறுத்துவதைப் போன்றது. பெங்களூரு நகரம் பல்லாயிரம் ஆண்டுகளாக பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்றது, எல்லா இடங்களிலிருந்தும் மக்களை வரவேற்றுள்ளது. எனவே நாம் பன்முகத்தன்மையை கொண்டாட வேண்டும், எல்லாவற்றுக்கும் வரம்புகளை விதிக்கக்கூடாது என்று மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.