குளத்தில் வாழ்ந்த இளைஞரின் வாழ்வையே மாற்றிய ஆனந்த் அம்பானி!

Arun Mozhi Varman   | SIGWIRE
Published : Aug 19, 2026, 01:34 PM IST

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுப்ரதா தாஸ், பல ஆண்டுகளாகக் குளத்தில் வசித்து வந்த அவரது சோகமான கதை, ஒரு வைரல் வீடியோவாக மாறியது. இந்த வீடியோ ஆனந்த் அம்பானியின் கவனத்தை ஈர்க்க, அவர் உடனடியாக அந்த இளைஞருக்கு மருத்துவ மற்றும் நிதி உதவிகளை வழங்க முன்வந்தார்.

PREV
15
anant ambani changed the life of a young man who lived in a pond
குளத்துவாசி சுப்ரதா தாஸின் பரிதாப நிலை

சுப்ரதா தாஸ் மேற்கு வங்கத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர். கடந்த நான்கு ஆண்டுகளாக, தனது முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயத்தால், அவரது உடல் கிட்டத்தட்ட செயலிழந்தது. அவருக்குக் குளிர்ந்த நீர் மட்டுமே சவுகரியமாக இருந்ததால், வீட்டிற்கு அருகிலுள்ள குளத்தில் அவர் நிரந்தரமாக வசித்து வந்தார். உணவுக்காகவும் அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் மட்டுமே கரையேறும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அவரது வறுமைதான் இதற்கு காரணம்.

இதையும் படிங்க : Jewellery Watches : விஷேசங்களுக்கு கட்ட செம்ம ஸ்டைலான ஜுவல்லரி வாட்சுகள்!

25
சமூக வலைத்தளங்களில் பரவிய பரிதாபக் கதை

சஞ்சய் டெக் யூடியூப் சேனலின் சஞ்சய் மஹாட்டோ, சுப்ரதா தாஸின் துயரமான வாழ்வைக் கண்டு ஒரு வீடியோவை உருவாக்கினார். இந்த வீடியோவில், சுப்ரதா குளத்தில் வாழும் காட்சிகள், அவரது குடும்பத்தின் வறுமை நிலை, மற்றும் சிகிச்சைக்கான கோரிக்கை ஆகியவை விளக்கமாகப் பதிவு செய்யப்பட்டன. வெறும் 500 ரூபாய்க்கான மருந்துகூட வாங்க முடியாத குடும்பத்தின் நிலைமையை சஞ்சய் மஹாட்டோ உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். இந்த வீடியோ லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு, பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க : Ginger Garlic Paste : இஞ்சி-பூண்டு பேஸ்ட் மாதக்கணக்கில் ஃப்ரெஷ்ஷா இருக்கணுமா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

35
ஆனந்த் அம்பானியைச் சென்றடைந்த வீடியோ

சஞ்சய் மஹாட்டோ வெளியிட்ட இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் மின்னல் வேகத்தில் பரவியது. பலரும் அதை லட்சக்கணக்கான முறை பகிர்ந்தனர். இது மும்பையில் இருந்த ஆனந்த் அம்பானியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த், இந்த வீடியோவைக் கண்டவுடன், சுப்ரதாவின் நிலை குறித்து வருந்தினார். உடனடியாகத் தன்னார்வக் குழுக்கள் மூலமாக, சுப்ரதா தாஸைத் தொடர்புகொள்ள ஏற்பாடு செய்தார்.

இதையும் படிங்க : Google Maps : தொலைந்த ஃபோனை கூகுள் மேப் வச்சு எப்படி கண்டுபிடிக்கறது?

45
அனந்த் அம்பானி வழங்கிய உடனடி உதவிகள்

ஆனந்த் அம்பானி இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்டவுடன் தாமதிக்கவில்லை. உடனடியாக சுப்ரதா தாஸுக்கு மருத்துவ மற்றும் நிதி உதவிகளை வழங்கத் தயாரானார். சுப்ரதாவின் வீட்டுக்கு ஆட்களை அனுப்பி, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவுகளையும் முழுமையாக ஏற்றுக்கொண்டார். மேலும், அவரது குடும்பத்தின் வறுமை நிலையைக் கருதி, தேவையான நிதி உதவிகளையும் வழங்க உறுதியளித்தார்.

இதையும் படிங்க : Instant Noodles : 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைக்கு நூடுல்ஸ்? மறைந்திருக்கும் 8 ஆபத்துகள்!

55
சுப்ரதாவின் வாழ்வில் புதிய அத்தியாயம்

இந்தத் தலையீடு சுப்ரதா தாஸின் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது. மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு, அவர் குளத்தில் வாழ்வதைத் தவிர்த்து, வீட்டிலேயே தங்கியிருக்கத் தொடங்கியுள்ளார். அவரது குடும்பத்தினரும், கிராம மக்களும் இந்த உதவிக்காக அனந்த் அம்பானிக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர். சுப்ரதா விரைவில் குணமடைந்து, ஒரு சாதாரண வாழ்க்கையை வாழத் தொடங்குவார் என்ற நம்பிக்கை தற்போது எழுந்துள்ளது. இது ஒரு சிறந்த முன்மாதிரி.

இதையும் படிங்க : Hair Care : உங்கள் தலைமுடிக்கு சரியான ஷாம்பு எது? நிபுணர்களின் 7 டிப்ஸ்!

Read more Photos on
click me!

Recommended Stories