3 ஆண்டுகளுக்கு மேல் பயணம்; இந்தியாவின் மிகவும் தாமதமான ரயில் இது தான்!

Published : Dec 09, 2024, 07:50 AM IST

விசாகப்பட்டினத்திலிருந்து உத்தரபிரதேசத்தின் பஸ்திக்கு ஒரு சரக்கு வண்டி அதன் இலக்கை அடைய கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆனது. இது இந்திய இரயில்வே வரலாற்றில் மிகவும் தாமதமான ரயில் பயணமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

PREV
15
3 ஆண்டுகளுக்கு மேல் பயணம்; இந்தியாவின் மிகவும் தாமதமான ரயில் இது தான்!
Most Delayed Train

மோசமான வானிலை, தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட பல காரணங்களால் ரயில்கள் தாதமாக வருவது வழக்கமான ஒன்று தான். ஆனால் ஒரு ரயில் கிட்டத்தட்ட 3.8 ஆண்டுகள் தாமதமாக சென்றது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். உண்மை தான்..

1,316 மூடைகள் டி-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரத்துடன் கூடிய சரக்கு ரயில் வேகன் நவம்பர் 10, 2014 அன்று அதன் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, ஜூலை 25, 2018 அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள பஸ்தி ரயில் நிலையத்தை அடைந்தது. 

25
Goods Train

விசாகப்பட்டினத்திலிருந்து உத்தரபிரதேசத்தின் பஸ்திக்கு ஒரு சரக்கு வண்டி அதன் இலக்கை அடைய கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆனது. இந்திய இரயில்வே வரலாற்றில் மிகவும் தாமதமான ரயில் இதுவாகும். அதன் பயணத்தை முடிக்க மொத்தம் 3 ஆண்டுகள் 8 மாதங்கள் 7 நாட்கள் ஆனது.

பாஸ்தியைச் சேர்ந்த ராம்சந்திர குப்தா என்ற தொழிலதிபர் ராம்சந்திர குப்தா ஆவார், மேலும் அவரது பெயரில் 2014 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் இருந்து இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் (ஐபிஎல்) மூலம் வேகன் முன்பதிவு செய்யப்பட்டது.

ரயிலில் பொது டிக்கெட்டில் பயணிக்க இதுதான் முக்கியமான விதி! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

35
India's Most Delayed Train

14 லட்சத்துக்கும் அதிகமான பொருட்களை ஏற்றிக்கொண்டு, பயணத்தை முடிக்க வழக்கமான பயண நேரம் 42 மணிநேரம் என்ற நிலையில், அட்டவணைப்படி விசாகப்பட்டினத்தில் இருந்து ரயில் புறப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக ரயில் சரியான நேரத்தில் வரவில்லை.

2014 நவம்பரில் பஸ்தியை சென்றடையாமல் போனதால், ராமச்சந்திர குப்தா ரயில்வே அதிகாரிகளை தொடர்பு கொண்டு பல எழுத்துப்பூர்வ புகார்களை அளித்தார். இதுகுறித்து பலமுறை தெரிவித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்போதுதான் ரயில் சென்று கொண்டிருந்த போது காணாமல் போனது தெரியவந்தது.

45
India's Most Delayed Train

வடகிழக்கு ரயில்வே மண்டலத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சஞ்சய் யாதவ், “சில நேரங்களில், சில பெட்டிகளில் பழுது ஏற்படும் போது அது யார்டுக்கு அனுப்பப்படுகிறது, இந்த விஷயத்திலும் அதுவே நடந்ததாகத் தெரிகிறது. 

விசாரணைக்குப் பிறகு, உரங்களை ஏற்றிச் சென்ற ரயில் இறுதியாக ஜூலை 2018 இல் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பஸ்தி ரயில் நிலையத்திற்கு வந்தது. இருப்பினும், இந்தக் காலகட்டத்தில் ரயில் எங்கே, எப்படி, ஏன் தாமதமானது அல்லது காணாமல் போனது என்பது குறித்து எந்த தெளிவான விவரங்களும் இல்லை.

இந்தியாவில் அதிவேமாக செல்லும் டாப் 10 ரயில்கள்; அட! இந்த ரயிலும் இருக்கா?

 

55
Most Delayed Train

வரலாறு காணாத இந்த தாமதத்தால், 14 லட்சம் மதிப்பிலான உரங்கள் பயனற்றுப் போய்விட்டன. இந்திய ரயில்வே வரலாற்றில் மிகவும் தாமதமான ரயில் பயணமாக இந்த சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories