துரித உணவுகள்
துரித உணவுகள், குளிர்விக்கப்பட்ட அல்லது உறைந்த நிலையில் இருப்பதனால், சுவை குறைகிறது. இதனை தவிர்ப்பதற்காகவும், அதன் சுவையை தக்க வைக்கவும் சர்க்கரை, உப்பு, கொழுப்பு மற்றும் நறுமணம் வண்ணங்கள் போன்றவை சேர்க்கப்படுகிறது. இது மனித உடலுக்கு கேடு விளைவிக்கும். ஞாபக சக்தி குறைவு, கவனக் குறைவு மற்றும் திட்டமிட்டு செயல்படும் திறன் குறைவு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சர்க்கரையை அதிகமாக பயன்படுத்தினால் மூளைக்கு தீங்காக அமைகிறது. ஏனெனில் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இல்லையெனில், இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள், மூளையையும் பாதிக்க கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.