எல்லாப் புற்றுநோயும் மரணத்தை ஏற்படுத்துவதில்லை. மார்பகப் புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், அதிலிருந்து முழுமையாக மீண்டு விடலாம். இவற்றை ஆரம்ப நிலையில் கண்டறிய தேவையான குறிப்புகள்.
இரண்டு மார்பகங்களையும் பரிசோதிக்க வேண்டும். அதில், கட்டிகள், மார்பக அளவு மாற்றங்கள், முலைக்காம்புகளில் திரவம் சுரப்பது, முலைக்காம்புகளில் வீக்கம், மார்பகங்களின் நிறமாற்றம் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.