நாம் தினமும் பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷில் கண்களுக்கு தெரியாத அளவுக்கு பல பாக்டீரியாக்கள் தேங்கிக் கொண்டே இருக்கும். குறிப்பாக, பிரஷ்ஷை குளியலறையில் திறந்த இடத்தில் வைத்தால், ஈரப்பதம் காரணமாக கிருமிகள் வேகமாக பெருகும். இந்த சூழலில் நீண்ட நாட்கள் அதே பிரஷ்ஷை பயன்படுத்தினால், பல் தொற்றுகள் மற்றும் வாய்நோய்களுக்கு வாய்ப்பு அதிகரிக்கும். மேலும், காலப்போக்கில் பிரஷ்ஷின் முட்கள் வளைந்து அதன் திறன் குறையும்.