ஆனால் இவை அனைத்திற்கும் காரணம் நாமே என்பதையும் நாம் அறிய வேண்டும். அதை தடுக்கவும் பல்வேறு முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும். ஐயா அப்துல் கலாம் அவர்கள் கூறியது போலவும், அவருடைய சீடர் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் கூறியதை போலவும் மரங்கள் பலவற்றை நட்டு அதன் மூலம் நாம் பயன்பெறுவோம். இந்த பதிவில் நம் வீட்டிற்குள் வருகின்ற காத்தை சுத்தம் செய்யக்கூடிய நான்கு முக்கியமான செடிகளை பற்றி காணலாம்.
பீஸ் லில்லி.. தற்பொழுது பல வீடுகளில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது இந்த செடி என்று கூறினால் அது மிகையல்ல. கோடைகால துவக்கத்தில் வெள்ளை நிற பூக்களை துளிர்விடும் இந்த செடிகள் காற்றிலுள்ள நச்சுத்தன்மைகளை பெரிய அளவில் குறைக்க வல்லது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மிதமான வெயில் படும் இடங்களில் இதை வைத்தாலே போதுமானது, ஆனால் இந்த செடியை தாங்கி நிற்கும் மண்ணை சற்று காய விடாமல் பார்த்துக் கொண்டால் போதும்.
Postpartum Back Pain : பிரசவத்திற்கு பின் முதுகு வலி? உங்களுக்கான வீட்டு வைத்தியம் இதோ..!!