சின்ன சத்தம் கேட்டால் கூட தூக்கம் கலைகிறதா? இந்த நோய்கள் வரும் ஆபத்து உள்ளது

First Published Jan 17, 2023, 5:41 PM IST

light sleep risk: சின்ன சத்தம் கேட்டால் கூட தூக்கத்தில் இருந்து விழிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு சில பிரச்சனைகள் உண்டாகின்றன. இந்த மாதிரியான லேசான தூக்கத்தால் வரும் பிரச்சனைகள் குறித்து இங்கு காணலாம். 

Image: Getty Images

கும்ப கர்ணன் போல தூங்குபவர்களும் உண்டு. விரைவாக தூங்கி எழுபவர்களும் உண்டு. எந்த வகை தூக்கமாக இருந்தாலும் ஆழ்ந்ததாக இருந்தால் நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். லேசான உறக்கத்தில் சிறு சத்தம் கேட்டாலே எழுந்துவிடுவோம். இதனால் அந்த நபர் எளிதில் எரிச்சல் அடையும் ஆளாக மாறுகிறார். ஒரு நபர் நாள்தோறும் 7 முதல் 8 மணி நேரம் தூங்கினால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்க முடியும். 

துரதிஷ்டவசமாக சிலருக்கு எவ்வளவு முயன்றும் ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை. இது அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகிறது. நமக்கு வேலை முக்கியம்; தூக்கம் தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால் உடலுக்கு அப்படியில்லை. சிலர் கொஞ்ச நேரம் தூங்கினாலும் ஆழ்ந்து உறங்குவார்கள். சிலர் மணிக்கணக்கில் தூங்கினாலும் மூச்சுத்திணறல், இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறட்டை, தூக்கத்தில் நடப்பது ஆகிய காரணங்களால் ஆழ்ந்த தூக்கம் அனுபவிப்பதில்லை. இப்படி லேசான உறக்கத்தால் வரும் பிரச்சனை குறித்து இங்கு காணலாம்.

நீரிழிவு தொந்தரவு

லேசான தூக்க பிரச்சனை உள்ளவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இரவில் சிறிய சத்தம் எழுப்புவதால் மீண்டும் மீண்டும் தூக்கம் கெடும். இதனால் சரியாக தூங்க முடியவில்லை. ஒரு நாளில் 7 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கம் இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கும். இது பசியை அதிகரிக்கிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படும். ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளவர்களும், சர்க்கரை நோய் வர வேண்டாம் என நினைப்பவர்களும் சரியாக தூங்க வேண்டும். 

உடல் பருமன் அதிகமாகும்! 

தூக்கமின்மை உடலில் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது. உடலில் ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கிறது. இது பசியை அதிகரிக்கிறது. இப்படி பசி அதிகமாகி அதிகப்படியான உணவை எடுப்பதால் உடல் எடை கூடுகிறது. 

இதையும் படிங்க: Papaya aval kesari: உடலுக்கு சக்தி தரும் ருசியான 'பப்பாளி அவல் கேசரி' ஈஸியா எப்படி செய்வது?

இதய நோய் 

உங்கள் உடலுக்கு போதுமான தூக்கம் இல்லாமல் போனால் அது கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். தேவையான தூக்கம் இல்லையென்றால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. 

உயர் இரத்த அழுத்தம் 

உயர் இரத்த அழுத்தம் என்பதை அமைதியான கொலையாளி எனலாம். முதலில் இந்த நோயின் அறிகுறிகள் தெரியாது. ஆனால் இந்த நோயால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம். சரியாக தூங்காத போது மன அழுத்தம் அதிகமாகும். இந்த மன அழுத்தம் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்துகிறது. ஒழுங்காக தூங்க வேண்டும். 

Sleeping Tips

நல்ல தூக்கத்திற்கு டிப்ஸ்! 

சிறிய சத்தத்தால் கூட எழும் நபராக இருந்தால் முடிந்தவரை அமைதியான அறையில் தூங்குங்கள். தூங்கச் செல்வதற்கு முன் ஒரு புத்தகத்தைப் படியுங்கள். டி.வி., மொபைல் போன்றவற்றில் நேரம் செலவிட வேண்டாம். குறட்டை விட்டு தூக்கத்தை தொந்தரவு செய்யும் நபரிடமிருந்து விலகி தூங்குங்கள். பகல் தூக்கத்தை தவிருங்கள். வேலை எவ்வளவு அழுத்தமாக இருந்தாலும் தினமும் 7 மணி நேரம் தூங்குவதை பழக்கப்படுத்துங்கள். குறிப்பிட்ட நேரத்தில் தூங்க பழகுவது தூக்கமின்மையை குறைக்கும். 

இதையும் படிங்க: 'சரும நிறத்தை இழக்கிறேன்'புது நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை உருக்கம் இந்த அறிகுறிகள் தான் காரணமா?

click me!