தூசி மற்றும் சளி ஆகியவற்றால் பலருக்கும் தும்மல் வருவது இயல்பு தான். சிலருக்கு காலை எழுந்த உடனோ, குளிர்காற்று படும்போதோ மற்றும் மாலை நேரத்திலோ தும்மல் வரும். பலவித காரணங்களால் நமக்கு தும்மல் வந்தாலும் தொடர்ந்து வரும்போது, அது நிச்சயமாக ஒருவரை சோர்வடையச் செய்யும். மேலும் இதன் காரணமாக மூக்கு ஒழுகுதல், அரிப்பு, கண்களில் நீர் வடிதல், நெஞ்செரிச்சல், தலைவலி மற்றும் தீவிரச் சோர்வு ஆகிய பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது. ஒவ்வாமை ஏற்படுவதை தவிர்ப்பதன் மூலமாக தும்மல் வருவதை தடுக்க முடியும். அதே நேரத்தில் சில வீட்டு வைத்தியங்களும் தும்மலிலிருந்து நம்மை விடுபட வைக்கிறது.