தினமும் காலை நேரத்தில் டீ, காபி போன்றவற்றிக்கு பதிலாக இயற்கையாக கிடைக்கக்கூடிய காய்கறிகளுள் ஒன்றான வெள்ளைப் பூசணி வைத்து சாறு அல்லது ஜூஸ் செய்து குடித்தால் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நலன்களை அள்ளித்தரும்.அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
வெள்ளைப் பூசணியில் அதிகளவில் வைட்டமின் பி, வைட்டமின் சி , சுண்ணாம்பு சத்து , பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்து காணப்படுகிறது .மேலும் குறிப்பிட்டு சொன்னால் இதில் அதிகளவு நீர்ச்சத்து இருக்கிறது. பூசணிக்காய் வயிற்றில் இருக்கும் புண்களை ஆற்றுகிறது.
பூசணியை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும். மேலும் பூசணிக்காய் சாப்பிடுவதால் கண் பார்வை சிறந்து விளங்கும்.
பூசனை சாறு எடுத்துக் கொண்டால் உண்டாகும் பயன்கள்:
பூசணிக்காயில் இருக்கும் அதிகமான நார்ச்சத்து உடல் எடையை மளமளவென குறைந்து ஸ்லிம்மாக மாறுவதை நீங்கள் வெகு விரைவில் உணரலாம். அதோடு உடலில் இருக்கும் இரத்தத்தை சுத்திகரித்து எந்த ஒரு நோயினையும் ஆண்ட விடாமல் தடுக்கும்.
உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.
சிறுநீரகத்தில் தொற்று இருப்பவர்களுக்கு சிறுநீருடன் இரத்தம் வெளிவருவதை உடனே கட்டுப்படுத்தும். மேலும் பைல்ஸினால் ஏற்படும் இரத்தக் கசிவுவையும் தடுப்பதற்கு சிறந்த பானம் என்றே கூற வேண்டும்.