இளநீர் நல்லதுன்னு நினைச்சிருப்பீங்க.ஆனா தென்னங்குருத்தும் நல்லதாம்ங்க! இது இத்தனை நோய்களை விரட்டுமாம்.

First Published Mar 31, 2023, 7:43 PM IST

இன்று நாம் தென்னை மரம் தரும் தென்னங்குருத்தின் மருத்துவ பலன்களை இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

நம்மூரில் நாம் பல விதமான மரங்களை பார்த்திருப்போம். ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு விதத்தில் மருத்துவ குணத்தை தரும் பண்பு கொண்டதாக இருக்கும். அந்த வகையில் இன்று நாம் தென்னை மரம் தரும் தென்னங்குருத்தின் மருத்துவ பலன்களை இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

நலம் தரும் தென்னை:

தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் தென்னம்பூ, இளநீர், தென்னை ஓலை, தென்னங்குருத்து என ஒவ்வொன்றும் மனித குலத்திற்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. ஆனால் இதன் மருத்துவ பயன்கள் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.

இனிமையான தென்னங்குருத்து:

நம்மில் பலர் தென்னங்குருத்தை சாலைகளில் தள்ளு வண்டிகளில் விற்பதை பார்த்து கடந்து சென்றிருப்போம் .ஆனால் அது எவ்ளோ மருத்துவ தன்மை கொண்டது என்று பலரும் அறிந்திருக்க மாட்டீர்கள். இனி இந்த பதிவை படித்தால் , அடுத்த முறை தென்னங்குருத்தை பார்க்கும் போது கடந்து செல்லாமல் வாங்கி கொண்டு வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடுவீர்கள்.

தென்னைமரத்தின் அடி தண்டை வெட்டினால் அதனுள்ளே வெண்மையான பகுதி ஒன்று இருக்கும். அதுவே தென்னங் குருத்தாகும். இதனை பொள்ளாச்சி, மதுரை, கேரளா போன்ற ஊர்களில் அதிக அளவில் விற்பார்கள். இதில் பல்வேறு மருத்தவ குணங்கள் உள்ளன.

வயிற்று வலி:

வயிற்று வலி கொண்டவர்கள் இந்த தென்னங்குருத்தை சாப்பிடலாம். இதனை வாரத்தில் 2 அல்லது 3 முறை தொடர்ந்து சில வாரங்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி குணமாகும்.
தவிர வயிற்றில் இருக்கும் புண்களையும் ஆற்றும் பண்புடையது.

சிறுநீரக கல் :

இன்று நம்மில் அதிகமானோருக்கு சிறுநீரக பிரச்சனைகளில் ஒன்றான சிறுநீரக கல்லால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கற்களை கரைக்க தெடர்ந்து தென்னக்குருத்தை சாப்பிட்டு வந்தால் விரைவில் கறியும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

உடற்சூடு:

இப்போது இருக்கும் கோடை வெப்பத்திற்கு நம்மில் அதிகமானோர் உடல் உஷ்ணத்தினால் பாதிப்பு அடைகிறோம். இதனை தடுக்கவும், உடலின் தட்பவெப்பத்தை சீராக வைத்துக் கொள்ளவும் தென்னங்குருத்தை சாப்பிடலாம்.

மாதவிடாய் வலிகள் :

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயினால் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கும் தென்னங் குருத்தும், தென்னம்பூவும் வரப்பிரசாதம் என்றே கூறலாம். தயிரில் சிறிது தென்னம்பூவை சேர்த்து அரைத்து பருகி வர மாதவிடாய் வலிகள் மற்றும் தொற்றுகள் விரைவில் சரியாகும். அதோடு மாதவிடாய் சுழற்சி யில் பிரச்சினைகள் இருப்பின், விரைவில் சரியாகும்.

மஞ்சள் காமாலை :

மஞ்சள் காமாலை இருப்பவர்கள் இதனை எடுத்துக் கொண்டால் அதன் தாக்கத்தினை அதிகப் படுத்தாமல் பார்த்துக் கொள்ளும் தவிர சிறுநீர் வராமல் கஷ்டப்படுவோர் தென்னங்குருத்து மிகச்சிறந்த மருந்தாகும்.

தென்னங்குருத்தின் சுவை:

இந்த தென்னங்குருத்தின் சுவை ஒவ்வொரு ஊரின் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப அதன் சுவையில் வித்தியாசம் இருக்கும். பொதுவாக தென்னங்குருத்துகள் துவர்ப்பு, உவர்ப்பு, புளிப்பு, இனிப்பு என 4 விதமான சுவையில் இருக்கும். 

இட்லி,தோசைக்கு மாவு இல்லனு கவலையா ! 1 தடவ இன்ஸ்டன்ட் அடை செய்து சாப்பிடுங்க! பின் இதனையும் அடிக்கடி செய்வீங்க!

click me!