முக்கிய அறிகுறிகள்
தமிழ்நாடு உள்பட இந்தியா முழுக்க சில நாள்களாக புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. கடும் உடல் வலி, ஓயாத இருமல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, சளியுடன் கூடிய காய்ச்சல் போன்றவை அறிகுறிகளாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முளைகட்டிய தானியங்களில் கொட்டி கிடக்கும் சத்துக்கள்.. காலையில் எப்படி சாப்பிடணும்.. எப்படி சாப்பிடக்கூடாது..!
காய்ச்சல் வந்தால் செய்யவேண்டியது என்ன?
உங்களுக்கு மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் தென்பட்டால் அது பாக்டீரியாவால் ஏற்பட்ட காய்ச்சலா, வைரஸ் காய்ச்சலா என்பதை பரிசோதனை மூலம் கண்டறியவேண்டும். மருந்துகளை டாக்டர் சொல்வதை கேட்டு எடுத்து கொள்ளவேண்டும். நீங்களே காய்ச்சல் வந்ததும் 'ஆன்டி பயாடிக்' மருந்தை எடுப்பதால் அந்த கிருமிகளுக்கு 'ஆன்டி பயாடிக்' மருந்தை எதிர்க்கும் ஆற்றல் சுலபமாக ஏற்பட்டுவிடும் வாய்ப்புள்ளது.