கோழி இறைச்சி ஊட்டச்சத்துக்களை வழங்கினாலும், அதைச் சரியாக சமைக்கவில்லை என்றால், அது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். காய்ச்சலின் போது செரிமான அமைப்பு சற்று மந்தமாகச் செயல்படுவதால், எண்ணெய் அதிகம் உள்ள, எண்ணெயில் பொரிக்கப்பட்ட, காரமான கோழி உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக, உணவகங்களில் காணப்படும் பட்டர் சிக்கன், சிக்கன் கறிகள், கிரீமி கிரேவிகள், சிக்கன் லாலிபாப், சில்லி சிக்கன் மற்றும் ஷவர்மா போன்ற கனமான உணவுகளைத் தொடவே கூடாது. இதுபோன்ற கனமான உணவுகளைச் செரிப்பதற்கு உடல் அதிக ஆற்றலைச் செலவழிக்க வேண்டியுள்ளது. இது வயிறு உப்புசம் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், காய்ச்சலில் இருந்து மீள்வதையும் தாமதப்படுத்துகிறது. எனவே, வீட்டில் சுத்தமாகவும், குறைந்த மசாலாப் பொருட்களுடனும் சமைக்கப்பட்ட லேசான கோழி இறைச்சியை மட்டும் சாப்பிடுவது சிறந்தது.