மற்ற கொரோனா வகைகளை போலவே தற்போது புதிய JN.1 வகை கொரோனாவிலும் காய்ச்சல் அல்லது சளி, இருமல், மூச்சுத் திணறல், சோர்வு, தசை அல்லது உடல் வலி, தலைவலி, சுவை மற்றும் வாசனை இழப்பு, தொண்டை புண், நெரிசல், மூக்கு ஒழுகுதல், குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகிய அறிகுறிகள் நோயாளிகளுக்கு உள்ளன. கோவிட் தொற்றுநோய், அதிக அளவு மன அழுத்தம், பதட்டம் மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுடன் தொடர்புள்ளது, இது தூக்கக் கோளாறுகளை அதிகரித்துள்ளது என்றும் நிபுணர்கள் கூறுகின்ற்னார்.