35 முதல் 39 :
சுமார் 32 வயதிற்கு பிறகு குழந்தை பேறுக்கான வாய்ப்பு படிப்படியாக குறையும். இது 37 வயதிற்கு பிறகு இன்னும் மோசமடைகிறது. இந்த வயதில் குழந்தை பெற முயலும்போது பெண்கள் உயர் ரத்த அழுத்தம், கர்ப்ப கால நீரிழிவு நோய் போன்ற நோய்களில் அவதிபடுகிறார்கள். இதனால் பிரசவத்தில் சிக்கல் ஏற்படுகிறது.
40 முதல் 45 வயது:
பெண்கள் 40 வயதிற்கு பிறகு குழந்தை பெற முயலும்போது சிக்கல்களை சந்திக்கின்றனர். இந்த குழந்தைபேறு வாய்ப்புகள் 5% -க்கும் குறையவே இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக 40 வயதிற்கு பிறகு கர்ப்பம் ஆகும்போது உடல்நிலை காரணமாக சிலருக்கு கரு கலையவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரத்த உற்பத்தியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க!