மன அழுத்தம் இருப்பவர்கள் உடலில் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் உடலுக்கு போதிய ஆற்றல் கிடைக்காது. எப்போதும் சோர்வாக காணப்படுவார்கள். தினமும் நடைபயிற்சி செய்வதால் மனநிலையை மேம்படுத்துவதற்கு அவசியமான எண்டோர்பின் ஹார்மோன்கள் சுரப்பு அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைத்தால் செரிமானம் மேம்படும். உடலும் ஆரோக்கியமாகும்.
ஆயுர்வேதத்தின் படி.. சாப்பிட்ட பிறகு 100 காலடிகள் நடப்பது செரிமானத்திற்கு உதவுகிறது. தூக்க கோளாறுகளை சரி செய்கிறது. உடலை ஓய்வில் வைத்திருக்கும். நிம்மதியாக தூங்க சாப்பிட்ட பின்னர் நடைபயிற்சி செய்யுங்கள்.