துளசி
பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதத்தில் உபயோகம் ஆகும் துளசி செடி, வளிமண்டலத்தை சுத்தப்படுத்தும். பாக்டீரியா எதிர்ப்பு தன்மை உடையது. சளி, இருமலை குணப்படுத்த உதவும். துளசி இலைகளில் வைட்டமின்-சி, கால்சியம், தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. சில துளசி இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு அந்த நீரை குடித்தால் நன்மைகள் கிடைக்கும். கொஞ்சம் தேன் சுவைக்கு சேர்க்கலாம்.