முதலிரவில் பால் கொடுப்பதன் உண்மை பின்னணி:
காம சூத்ரா என்பது காமம், காதல், உறவு எல்லாவற்றையும் புரிந்து கொள்ள உதவும் நூல் ஆகும். இந்த நூல் பாலியல் செயல்பாட்டின் போது சகிப்புத்தன்மைக்காக பால் பயன்படுத்த வேண்டும் என சொல்லப்படுகிறது. கருஞ்சீரகச் சாறு, தேன், சர்க்கரை, மஞ்சள் மற்றும் மிளகு ஆகியவற்றை பாலில் சேர்த்து குடிப்பதன் மூலம் தம்பதியரின் முதலிரவு சுவாரசியமாக மாறும். பண்டைய இந்திய நூல்களின்படி, புதுமணத் தம்பதிகளுக்கு அவர்களின் முதலிரவில் குங்குமப்பூ மற்றும் பாதாம் கலந்த பால் கொடுப்பது அவர்களின் உடலில் புரதச்சத்தை அதிகரிக்கத்தான். இதன் மூலம் அவர்களின் ஆற்றல் அதிகரிக்கும். திருமண நாளில் அவர்கள் பகல் முழுவதும் களைப்பாக இருந்திருப்பார்கள். ஆகவே இரவில் அவர்களின் ஆற்றலைப் பலமடங்கு பெருக்க பால் கொடுக்கிறார்கள்.