ஜெய்ப்பூரைச் சேர்ந்த கட்டுமானத் துறையில் ஒரு சாதாரண இடைத்தரகர் தான் துஷ்யந்த் ஷர்மா (27). இவர் டிண்டர் ஆப்பில் பிரியா சேத் என்ற பெண்ணைச் சந்தித்தார். அப்போது தன்னை ரூ. 25 கோடி வருமானம் கொண்ட ஒரு நிறுவனத்தின் தலைவர் என பொய்யாக அறிமுகம் செய்துள்ளார். இது முழுக்க பொய் என்பது பிரியாவுக்கு அப்போது தெரியவில்லை. 2018 ஆம் ஆண்டு பிரியாவை தனது பிளாட்டில் சந்திக்கும்படி துஷ்யந்த் கேட்டுக் கொண்டார். அந்த சந்திப்பில் பிரியாவும், அவளுடைய இரண்டு நண்பர்களும் துஷ்யந்துக்கு கோகோயின் போதைப்பொருள் கொடுத்தனர்.
அப்போது அவரிடம் பணம் கேட்டு மிரட்டப்பட்டது. தான் பண்க்காரர் அல்ல என்ற உண்மையை துஷ்யந்த் சொல்லவும், பிரியா உள்பட மூவரும் விரக்தியடைந்தனர். தொடர்ந்து துஷ்யந்த் அப்பாவிற்கு அழைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணத்தை பெற்றதும் இரக்கமே இல்லாமல் துஷ்யந்தை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் போட்டு டெல்லி-ஜெய்ப்பூர் விரைவுச்சாலையில் வீசியுள்ளனர். ஆன்லைன் டேட்டிங்கில் எல்லோருக்கும் நல்ல காதல்கள் அமைவதில்லை. மக்களே உஷார்!!
இதையும் படிங்க: ஆலியாவுக்கு இந்த பொசிஷன் தான் புடிக்கும்.. வெட்கமே இல்லாமல் பெட் ரூம்ல நடக்குறத சொன்ன ரன்பீர் கபூர்