குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும்போது அது தனிப்பட்ட முறையில் குழந்தையுடன் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த நெருக்கம் தாய்க்கும் குழந்தைக்கும் இருப்பதை நீங்கள் விரும்புகிறீர்கள். இது இயல்புதான். அதை உதாரணத்துடன் எளிமையாக சொல்லுங்கள். அவர் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டியது உங்களுக்கு கோபத்தை வரவழைத்தது என கடுமையாக பேசாமல், குழந்தை அழுகையை நிறுத்த அவர் செய்தது இயல்பானதாக இருந்தாலும் நீங்கள் பொசசிவ்-ஆ இருக்கிறீர்கள் என்பதை தன்மையாக சொல்லி புரிய வையுங்கள்.
இந்த விஷயத்தில் கோபம், வெறுப்பு ஆகியவை தவிர்த்து அன்புடன் உரையாடலை தொடங்குங்கள். நிச்சயம் உங்களுடைய மாமியார் இதை புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. நலம் வாழுங்கள்.
இதையும் படிங்க: வெயில் காலத்தில் 1 'தேங்காய் பூ' சாப்பிடுங்க! இந்த 'பூ'வுக்கு பல நோய்களை விரட்டி அடிக்கும் மகிமை இருக்கு