இப்படி ஒருவரை என்னை நோக்கி ஈர்த்த பின்பு அந்த உறவு நச்சுத்தன்மை வாய்ந்ததாகவோ (toxic) அல்லது கையாள முடியாத அளவுக்கு மோசமாக மாறும் முன்பு, அந்த நபருடன் உறவை முறித்துவிடுவேன். உறவில் இருந்தால் நான் எப்போதும் கட்டுப்பாட்டில் இருப்பது போல் இருக்கிறது. இப்போது வரை 5 முதல் 6 பேருடன் டேட்டிங் சென்றுள்ளேன் இந்த எண்ணிக்கை தொடரலாம்! ஆண்களை என்னை நோக்கி ஈர்ப்பதை நான் ரசிக்கிறேன்" என தன் கதையை அவர் முடிக்கிறார்.
உண்மையில், பாராட்டுக்காகவும், கவன ஈர்ப்புக்காகவும் ஒருவருடன் இருப்பவரால் அந்த த்ரில் முடிந்ததும் அந்த உறவை தொடரமுடிவதில்லை. தாங்கள் காதலிக்கப்படுவதை அவர்கள் விரும்புகிறார்கள் அவ்வளவு தான். இந்த மாதிரி காதல் வலையில் சிக்கி கொள்ளாதீர்கள். அதிலும் உங்களுடன் உறவில் இருக்கும்போது மற்றொருவரை நோக்கி ஈர்க்கப்பட்டு ஏமாற்றும் நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். டைம்பாஸ்!
இதையும் படிங்க: தொடர்ந்து ஏமாற்றும் கணவர் மீண்டும் மனம்மாறி வந்தால், அப்ப மனைவி என்ன செய்ய வேண்டும்? நிபுணரின் பதில்!!