அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெயை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். எண்ணெய் கொதித்த பின்னர் அடுப்பின் தீயனை சிம்மில் வைக்க வேண்டும்.
இப்போது கடாயில் 1/2 கரண்டி அளவு மாவை எடுத்து, கொதிக்கும் எண்ணையில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரித்துக் கொள்ள வேண்டும். ஒரு பக்கம் வெந்த பிறகு, மறுபக்கம் திருப்பி போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுத்தால் தித்திக்கும் சுவையில் கந்தரப்பம் ரெடி! இதே போன்று அனைத்து மாவினையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கந்தரப்பம் சுட்டு எடுக்க வேண்டும்.
பங்குனி உத்திரமான நாளை விரதம் இருப்பவர்கள், விரதம் இருக்க இயலாதவர்கள் இந்த கந்தரப்பத்தை வீட்டில் செய்து முருகனுக்கு படைத்து முருகப்பெருமானின் அருளாசி பெற்று வாழ்வில் முன்னேறுங்கள்!
குறிப்பு: எண்ணெய் சேர்க்க விரும்பாதவர்கள் இட்லி பத்திரத்தில் ஊற்றி ஆவியில் வைத்து 3 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்தால் பஞ்சு போன்ற சாஃப்ட்டான அப்பம் ரெடி!
பங்குனி உத்திரத்தன்று இந்த 1 பொருளை வீட்டில் வைத்து வழிபட்டால் வாழ்வில் அடுத்தடுத்து வெற்றிகள் குவியும்!