கமல் பேச்சால் டிரெண்ட் ஆன "கறி மீன் பொளிச்சது".. இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க..!

Published : May 20, 2025, 03:08 PM ISTUpdated : May 20, 2025, 03:40 PM IST

‘தக் ஃலைப்’ படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன் கறி மீன் பொளிச்சது குறித்து பேசியிருந்தார். தற்போது இது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. பலரும் மீன் பொளிச்சது எவ்வாறு செய்ய வேண்டும் என தேடத் துவங்கியுள்ளனர். 

PREV
14
Kerala Speical Curry Meen Polichathu

கடல் உணவுகளில் பெரும்பாலான மக்களால் விரும்பி சாப்பிடப்படுவது மீன் தான். கேரளா, மேற்குவங்கம் போன்ற கடலோர மாநிலங்களில் மக்கள் மீன் உணவுகளையே அதிகம் விரும்பி உண்கின்றனர். குறிப்பாக கேரளாவில் செய்யப்படும் கறி மீன் பொளிச்சது பலராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது. தமிழகத்திலும் பல உணவகங்களில் கறி மீன் பொளிச்சது விற்பனையாகிறது. இருப்பினும் அதிக விலை காரணமாக பலரும் இதை வாங்கி உண்ண முடிவதில்லை. இதை வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

24
தேவையானப் பொருட்கள்:

பெரிய சைஸ் கறி மீன் - 1

(கேரளாவில் கிடைக்கும் கறி மீன் கிடைக்கவில்லை என்றால் உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு மீனை எடுத்துக் கொள்ளலாம்)

மசாலாப் பொருட்கள்:

  • மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
  • சீரகத்தூள் - 1 ஸ்பூன்
  • தனியா தூள் - 1 ஸ்பூன்
  • மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எலுமிச்சம்பழம் - அரை மூடி

மீன் தாளிப்பதற்கு தேவையானப் பொருட்கள்:

  • வெங்காயம் - 2
  • பச்சை மிளகாய் - 2
  • தக்காளி - 1
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
  • தேங்காய் பால் - 1 கப்
  • குழம்பு மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
  • பூண்டு - 5 பல்
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
  • வாழை இலை - 1
34
செய்முறை:

முதலில் மீன் மீது கத்தியால் கீறல்கள் இடவேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்களை சரியான அளவில் எடுத்து மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்து, மீன் மீது தடவி 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் மீனை தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை தூவி ஃப்ரை செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

மசாலா தொக்கு செய்முறை:

மசாலா தொக்கு செய்வதற்கு கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பூண்டு நன்றாக வதங்கிய பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும். பின்னர் மசாலாத் தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்க்கவும். இறுதியாக தேங்காய் பால் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும். தொக்கு பதத்திற்கு வந்த பின்னர் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

வாழை இலையை அடுப்பில் வாட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு கரண்டி மசாலா தொக்கு பரப்பி, அதன் மேல் வறுத்த மீனை வைத்து, பின்னர் மீதமுள்ள தொக்கை வைத்து, இலையை பொட்டலமாக மடித்து கட்டிக் கொள்ளவும். இதை ஒரு தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி இரு பக்கமும் வெந்து வரும் வரை மிதமான தீயில் வாட்டி எடுக்க வேண்டும்.

44
கறி மீன் பொளிச்சது தயார்

பின்னர் வாழை இலையை பிரித்துப் பார்த்தால் சுவையான கறி மீன் பொளிச்சது தயார். இதன் மேல் எலுமிச்சை சாறு, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தழை தூவி சாப்பிட்டால் சுவை அபாரமாக இருக்கும். எளிமையான முறையில் அதே சமயம் ஆரோக்கியமாகவும், சத்தாகவும் செய்யப்பட்ட மீன் பொளிச்சதை அடிக்கடி செய்து சாப்பிடுங்கள். இனி இதை உணவகங்களில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமும் இருக்காது.

Read more Photos on
click me!

Recommended Stories