பெப்பரோனி, பன்றி மாமிசம் போன்ற அதிக கொழுப்புள்ள பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை பீட்சாவில் மேல்புறமாக தூவி சாப்பிடுவதால் குடல், வயிற்று புற்றுநோய் போன்ற சில வகையான புற்றுநோய்களை உருவாக்கும் அபாயம் உள்ளது. பீட்சாவைச் சாப்பிடுவது குற்றமல்ல. ஆனால் அளவாக உண்ண வேண்டும். பீட்சாவை அதிகமாக சாப்பிடுவது செரிமானத்தை மெதுவாக்கும். அத்துடன் மந்தமான வளர்சிதை மாற்றத்தை உருவாக்கும்.
பீட்சாவை ஆரோக்கியமான வழியில் ருசிக்க அதை வீட்டில் செய்யுங்கள். அதில் சேர்க்கும் சீஸ் அளவை கட்டுப்படுத்தலாம். மைதாவிற்குப் பதிலாக, கோதுமை மாவில் தயாரிக்கலாம். உணவகத்தில் வாங்கி பீட்சா சாப்பிடுவதை மட்டுமே நீங்கள் விரும்பினால், அளவாக உண்ணுங்கள்.
இதையும் படிங்க: வெறும் தரையில் படுத்து தூங்கினால் பறந்து போகும் முதுகு வலி! இன்னும் நம்ப முடியாத நன்மைகள் இருக்கு!