தலைமுடி வளர சூப்பர் டிப்ஸ்!!

Published : Aug 15, 2024, 10:37 AM IST

Aloe Vera hair mask benefits: கற்றாழை நமது சருமத்திற்கு மட்டுமல்ல, கூந்தலுக்கும் நன்மை பயக்கும். இது முடியை உள்ளிருந்து வலுப்படுத்தி, பட்டு போன்ற, பளபளப்பான மற்றும் வலுவான கூந்தலைப் பெற உதவுகிறது. கற்றாழையை எப்படி முடியில் பயன்படுத்தலாம் என்று இப்போது பார்க்கலாம்.

PREV
16
தலைமுடி வளர சூப்பர் டிப்ஸ்!!
Aloe Vera and Coconut oil

2 தேக்கரண்டி கற்றாழை ஜெல், 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை நன்கு கலந்து  உச்சந்தலை முடியில் தடவவும். இதை 30-40 நிமிடங்கள் ஊற விட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு பயன்படுத்தி நன்கு கழுவவும். 

26
Aloe Vera and Honey

ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல், 1 தேக்கரண்டி தேன் கலந்து தலைமுடியில் மாஸ்க்காக பயன்படுத்தவும். 20-30 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் நன்கு கழுவி, பின்னர் ஷாம்பு செய்யவும். 

36
Aloe Vera and Lemon

ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்,1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து உச்சந்தலையிலும் முடியிலும் தடவி 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு செய்யவும். இது உச்சந்தலைக்கு புத்துணர்ச்சி கொடுத்து பொடுகை நீக்கும்.

46
Aloe Vera and Curd

2 தேக்கரண்டி கற்றாழை ஜெல், 2 தேக்கரண்டி தயிரை கலந்து உச்சந்தலை முடியில் தடவவும். இதை 30 நிமிடங்கள் ஊற விடவும். இந்த ஹேர் மாஸ்க் உச்சந்தலையை சுத்தப்படுத்தி, முடியை வலுப்படுத்துகிறது.

56
Aloe Vera and Olive Oil

2 தேக்கரண்டி கற்றாழை ஜெல், 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலந்து உச்சந்தலை முடியில்  தடவவும். இதை 30-40 நிமிடங்கள் ஊற விடவும். இது முடியை வலுப்படுத்தி, முடி உதிர்வை தடுக்கும். 

66
Aloe Vera and Egg

ஒரு முட்டையை நன்கு அடித்து, 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து 20-30 நிமிடங்கள் தலையில் ஊறவிடவும். குளிர்ந்த நீரில் ஷாம்பு பயன்படுத்தி நன்கு கழுவவும். இது முடிக்கு புரதத்தையும் ஈரப்பதத்தையும் வழங்குகிறது.

 

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories