ஒவ்வொரு பெண்களும் தங்களது முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் பலவிதமான பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், உங்களது முகத்தை இயற்கை முறையில் பளபளக்க மஞ்சள் மற்றும் நெய் பேஸ் பேக் உதவும் தெரியுமா? ஆம், மஞ்சள் மற்றும் நெய் பல நூற்றாண்டுகளாகவே வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டையும் கலந்து பேஸ் பேக்காக முகத்தில் தடவினால் முகம் பளபளக்கும். மஞ்சளில் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. அதுபோல நெய்யில் ஊட்டமளிக்கும் மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன. எனவே இவை இரண்டும் ஒன்று சேர்ந்து முகத்திற்கு பளபளப்பை கொடுக்க உதவுகின்றன. எனவே, மஞ்சள் மற்றும் நெய் கலந்த பேஸ் பேக்கை முகத்திற்கு பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு காணலாம்.
26
சுற்றுச்சூழல் அழுத்தங்களிலிருந்து பாதுகாக்கும்:
மஞ்சளில் இருக்கும் ஆக்சிஜனேற்ற பண்புகள் புறஉதா கதிர், மாசுபாடு, தூசி போன்ற சுற்றுச்சூழல் அழுத்தங்களில் இருந்து உங்களது முகத்தை பாதுகாக்க உதவுகின்றன. நெய்யில் இருக்கும் ஊட்டமளிக்கும் பண்புகள் சருமத்தை மீட்டெடுக்க உதவுகிறது. இதனால் சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
36
சருமத்தை பொலிவாக்கும்:
மஞ்சள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. எனவே, இதனுடன் நெய் கலந்து பேஸ் பேக்காக போட்டால் சருமத்திற்கு ஊட்டமளித்து பளபளப்பாகவும், பொலிவாகும் மாறும்.
46
நிறமி, கரும்புள்ளிகள்:
மஞ்சள் மற்றும் நெய் சருமத்தில் இருக்கும் நிறம், கரும்புள்ளிகள் மற்றும் சீரற்ற சருமத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் இந்த பேஸ் பேக் கொலாஜன் உற்பத்தியை தூண்டி, சருமத்திற்கு நெகிழ்ச்சியை அளிக்கும். இதனால் முகம் பளபளப்பாக இருக்கும்.
மஞ்சளில் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் முகத்தில் இருக்கும் கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்க பெரிதும் உதவுகிறது. மேலும் நெய்யில் இருக்கும் பண்புகள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைக்கும். இதனால் முன்கூட்டியே வயதாவதைத் தடுக்கும்.
மஞ்சளில் இருக்கும் குர்குமின், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பரு, சரும வெடிப்பு மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மஞ்சள் மற்றும் நெய் பேஸ் பேக் உங்களது சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைக்கும்.