பொங்கல் விழாவில் அழகாகவும், தனித்துவமாகவும் கலந்து கொள்ளவே நாம் அனைவரும் விரும்புவோம். அதற்கு அதிகம் கூட மெனக்கெட வேண்டாம் வீட்டில் உள்ள பொருள்களுடன் கொஞ்சம் தேன் கலந்து முகத்தில் பூசினால் போதும். தேனில் முகத்தின் அழகு, மென்மையைத் தக்க வைக்கும் திறன் உள்ளது. முகத்தில் உள்ள தழும்புகள், கரும்புள்ளிகளை அறவே நீக்கிவிடும். இந்த அற்புத பலன் கொண்ட தேன் குறித்து காணலாம்.